சுமை தாங்கும் பிள்ளைகள்
ஒரு தாய்ப் பிள்ளைகள்
ஒருவர் தோள் மீது
ஒருவர் ஏறி அமர...
மனித மரம் வளர்ந்தது.
நகரந்து விடாதே என
எல்லோரும்
தன் கீழுள்ளோனை
எச்சரிக்க...
விளையாட்டை
இரசிக்கும்
அம்மாவுக்கோ
அச்சம் கலந்த கவலை....
சுமைகள் அத்தனையும்
ஊமையாய் ஏந்தி
கால்கள் தள்ளாட
கடைசியில் நிற்கும்
மகன் மீதல்ல...
சுமைகள் ஏதுமின்றி
சுகமாய்
உச்சியில் உள்ள மகன்
எங்கே
விழுந்திடுவானோ என
அச்சப்பட....
இப்படிப்பட்ட
அம்மாக்காள் தேவையா
சுமை தாங்கும் பிள்ளைகள்
முடிவு செய்க
மதம் சாதிய உறவுகள்
மண்ணோடு போக...
வட்டங்களுக்கு இடையே வாக்குவாதம்
இரண்டு வட்டங்களுக்கு
இடையே வாக்குவாதம்
எது சிறந்தது என ...
ஒன்று
குடும்பத்தையே
மையம் கொண்ட
சுயநல வட்டம்
இன்னொன்றோ
இனம் மொழி தேசம்
மையம் கொண்ட
பொதுநல வட்டம்
மனிதம் உலகம் என்ற
மையம் கொண்ட
மூன்றாவது வட்டம்
வந்த போது
முரணாய் இருந்த
முதலிரண்டு வட்டங்களும்
கூட்டணி அமைத்து ஒன்றானது....
புதிய
இரண்டு வட்டங்களுக்கு
இடையே வாக்குவாதம்
தொடர்ந்தது....
கடவுளே சொன்ன மாதிரி...
அப்பா
கடவுளைப் பற்றி
ஆராய்ச்சி செய்தேன்
ஆனந்தமாய் ஆனந்தி....
ஒரு பொருள்
எங்கும் உண்டு
என்பதும்
எங்கும் இல்லை
என்பதும்
ஒன்று தானே அப்பா
புரியலையே ஆனந்தி
எதன் ஒன்றின் இருப்பும்
அதன்
இல்லை என்ற எல்லை
தொடங்கும் போது தானே..
எப்படி
நமக்கு
எப்ப தெரிய வந்தது
வெளிச்சம்....
இருள்
தொடங்கிய இடத்தில்
உண்மை...
பொய்மை
தொடங்கிய இடத்தில்
நன்மை...
தீமை
தொடங்கிய இடத்தில்
வளி.....
வெற்றிடம்
தொடங்கிய இடத்தில்
கடவுள்....
எது தொடங்கிய இடத்தில்
முடிவாய் என்ன தான்
சொல்ல வருகிறாய்
கடவுள்
உண்டா இல்லையா
இல்லை என்றால்
இருக்கு என்பதன் எல்லை
சொல்ல வேண்டி வரும்...
எங்கும் நிறைந்துள்ளார் கடவுள்
என்பது
உறுதியாய் தவறு....
என்ன சரியாப்பா
ஆனந்தி கன்னம் கிள்ளி
அப்பா சொன்னார்
நீ சொன்னா - என்
கடவுளே சொன்ன மாதிரி...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)