சித்திரை கனி



அழகிய மஞ்சள் பூக்கள்
சொன்னது என்பதற்காக
இலைகளை கைவிட்டு
இரண்டொரு நாட்களில் பூக்களையும் இழந்து
அனாதையாய் நிற்கும் அந்த மரத்தை
பார்க்கவே பாவமாய் இருக்கிறது.

சித்திரை கனிக்காக
பூஜைக்கு செல்லும் பூக்கள்
புண்ணியம் செய்தவை என
நீங்கள் சொல்லக் கூடும்

பறித்த ஒருவராவது
புண்ணியம் பற்றியோ பூஜை பற்றியோ
சொன்னீரோ  
அங்கே நிர்வாணமாய் நிற்கும்
ஆவாரம் பூ மரத்திடம்